முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 1,030 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2022

முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 1,030 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவை ஜூலை 4-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதனுடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. இது தேர்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி