அரசு ஊழியர், ஆசிரியர்களின் 6 மாத அகவிலைப்படியை பறிக்கும் விதத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர், அரசை கண்டிப்பதாக தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கும் வழக்கமான அகவிலைப்படி உயர்வை காலத்தோடு வழங்கவில்லை. பீகார் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை மாநிலங்களில் கூட உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்நாளில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் 2022 ஜன.,1ம் தேதியிட்டு வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை 6 மாதம் தாமதமாக அறிவித்தது மட்டுமின்றி 6 மாத நிலுவையையும் பறித்து அரசு ஊழியர், ஆசிரியர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டது
அரசு.தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டம், ஈட்டிய விடுப்புக்கான சரண்டர் தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி