சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2022

சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

 தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்குகிறது.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) உள்ள 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை நடப்புகல்வியாண்டில் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tndalu.ac.in/ என்றஇணையதளம் வழியாக ஆக.30 வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலை. பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி