TNPSC - குரூப் 4 தேர்வின் விடைக்குறிப்பு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2022

TNPSC - குரூப் 4 தேர்வின் விடைக்குறிப்பு வெளியீடு

 

டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆட்சபேனை மனுக்களை, வரும் 8க்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர் 274; இளநிலை உதவியாளர் 3,593, தட்டச்சர் 2,108; சுருக்கெழுத்தர் 1,024 உள்ளிட்ட, 7,301 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 4 தேர்வு, ஜூலை 24ல் நடத்தப்பட்டது.


மாநிலம் முழுதும், 7,689 மையங்களில், 18.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை நவம்பரில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், குரூப் - 4 தேர்வு வினாத்தாளுக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.இந்த விடைக்குறிப்பில், தவறுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 8ம் தேதி, மாலை 5:45 மணிக்குள், மனுக்களை அளிக்கலாம். 


எந்த வினாவுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனை உள்ளது என்பதை, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக்கொண்டுள்ள புத்தக ஆதாரங்களுடன், www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக, தேர்வர்கள் மனு அனுப்ப வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.வல்லுனர் குழுவின் முன் ஆட்சேபனைகள் வைக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி செய்யப் பட்ட விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஆட்களை தேர்வு செய்த பின் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி