இந்த கல்வியாண்டு முதல் கியூட் (cute) என்ற பொது நுழைவுத் தேர்வு மூலமாக, ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 44 ஒன்றிய பல்கலைக் கழகங்கள், 12 மாநில பல்கலைக் கழகங்கள் உட்பட மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் இந்த தேர்வு மூலமே சேர்க்கை நடத்தப்படுகிறது. இளங்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இளங்கலை பல்கலைக் கழக தகுதி தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அல்லது முடிந்தால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்கும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி