பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு: அமைச்சா் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2022

பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு: அமைச்சா் எச்சரிக்கை

 

பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தாா்.


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவா்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருள்களை வழங்க மறுத்த விவகாரத்தில் இதுவரை 2 போ் கைது செய்யப்பட்டு, 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.


ஜாதிய பாகுபாடுகள் நடைபெறுகின்றனவா என்பது குறித்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் முறையாக கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதல்வரின்அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னா் முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி