தமிழின் மிகச் சிறந்த ஆளுமை கவிஞர் தமிழ்ஒளி. அவரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2022

தமிழின் மிகச் சிறந்த ஆளுமை கவிஞர் தமிழ்ஒளி. அவரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்!

 

அதிகம் பேசப்படாத தமிழின் மிகச் சிறந்த ஆளுமை கவிஞர் தமிழ்ஒளி. அவரின் நூற்றாண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் கொண்டாடப் பட உள்ளது. நூற்றாண்டிற்குள் அவரது படைப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அமைக்கப்பட்டதே கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு. கவிஞர் தமிழ்ஒளியின் 98வது பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை ஜஸ்டிஸ் பஷீர் அகமத் சையத் (SIET) கல்லூரியின் தமிழ்த் துறையுடன் இணைந்து கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழு நடத்துகிறது.

கவிஞரின் பிறந்த நாளான செப்டம்பர் 21 (புதன்கிழமை) அன்று காலை 9 மணிக்கு கல்லூரி கல்லூரிக் கலையரங்கில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க நிகழ்வும் அதைத் தொடர்ந்து பகல் 10 மணிக்கு நடைபெறும் கவிஞர் தமிழ்ஒளி 98வது பிறந்த நாள் கருத்தரங்கிற்கும்

தாங்கள் வருகைத் தந்து, செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி