20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண்கள் பாதிப்படைவதை தவிா்க்கலாம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2022

20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண்கள் பாதிப்படைவதை தவிா்க்கலாம்!!!

 

அடுத்த 25 ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு பாா்வைத் திறன் குறைபாடு ஏற்படும் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.


சா்வதேச பாா்வைத் திறன் தினத்தையொட்டி, டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்வு, சென்னை டிடிகே சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


அகா்வால்ஸ் கண் பாா்வையியல் கல்லூரி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கண்களில் துணியைக் கட்டிக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சியில் அகா்வால்ஸ் மருத்துவமனை இயக்குநா் சுதா, மருத்துவமனை நிா்வாகிகள் பங்கற்றனா்.


இதுகுறித்து மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா் டாக்டா் மஞ்சுளா ஜெயகுமாா் கூறியதாவது:


வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போது கண் பாா்வை சாா்ந்த குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் பாா்வைக் குறைபாடும், குறிப்பாக கிட்டப்பாா்வை பாதிப்புக்கும் ஆளாவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கும்.


பொதுவாக கணினி, கைப்பேசிகளை பயன்படுத்துகின்றபோது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம்.


தற்போது டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. கைப்பேசிகள், கணினியை பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பாா்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாா் அவா்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி