இன்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2022

இன்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி

 

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், பாயிண்ட் ஆப் சேல் கருவிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த டோக்கனைசேஷன் எனப்படும் புதிய தரவுகள் சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்கெனவே பெரிய வணிகர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். டோக்கனைசேஷன் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உதவும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ரிசர்வ் வங்கியின் கார்ட் ஆன் ஃபைல் முறையிலான டோக்கன்சேஷனை மாற்றப்பட்டுள்ளன. தற்போது இந்த பணி நிறைவடைந்துவிட்டதால் புதிய டோக்கனைசேஷன் விதிமுறைகள் இன்று முதல் அமலாகின்றன.


இந்த புதிய விதிமுறைகளின்படி இனி ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் முன்னோடியான விவரங்களை எந்த நிறுவனமும் எடுக்கமுடியாது, சேமிக்கவும் முடியாது. டோக்கனைசேஷன் என்பது நமது கார்டுகளின் உண்மையான விவரங்களை டோக்கன் எனப்படும் மாற்று குறியீட்டுடன் மாற்றியமைப்பதாகும். மொபைல் போன்கள், டேப்ளட்கள், மடிக்கணினிகள், டெக்ஸ்டாப்கள், வாட்ச்கள், கையில் அணியும் பேண்டுகள், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் போன்ற சாதனங்களிலும் டோக்கனைசேஷன் செய்யமுடியும்.   

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி