ஆசிரியர் பணி: பாடத்திட்டம் விரைவில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2022

ஆசிரியர் பணி: பாடத்திட்டம் விரைவில் மாற்றம்

 முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான பாடத்திட்டம், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக நியமனங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்திருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு பி.எட்., படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, இட ஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.


இந்த போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம் உருவாக்கி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.


இதற்காக, பாடத்திட்ட மாற்றம் குறித்து, அடுத்த மாதம் தேர்வு வாரிய ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி