SMC 28.10.2022 - பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2022

SMC 28.10.2022 - பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...

 

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் :

இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டதில் உறுப்பினர் வருகை மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டம் TNSED Parent app ல் பதிவேற்றம் செய்யும் வழி முறைகள்...


 1. பள்ளி மேலாண்மை தலைவர்  தொலைபேசி எண் கொண்டு login செய்ய வேண்டும்.


 2. முதலில் பள்ளி மேலாண்மை குழு icon ஐ கிளிக் செய்த பின் வருகை என்ற  icon இருக்கும் அதை  click செய்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை  அப்டேட் செய்து SAVE கொடுக்க வேண்டும்.


 3.பின்பு திரையில் தோன்றும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற icon ஐ கிளிக் செய்து திட்டமிடுதல் &மதிப்பாய்வு  பகுதிக்குச் சென்றால் கீழ் பகுதியில்,புதிய திட்டம் என்ற ஒரு + குறியீடு  இருக்கும் அதை click செய்ய வேண்டும்.


4.திரையில் சேர்க்கை மற்றும் தக்க வைத்தல், கட்டமைப்பு, கற்றல், மேலாண்மை என்ற 4 உட்கூறுகள் இருக்கும்.


5. நான்கு உட்கூறுகள் அல்லது ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நமது பள்ளிக்குத்

 தேவையான திட்டங்களை அதில் பதிவேற்றம் செய்யலாம்.


6. ஒரு மாதத்திற்கு 10 பள்ளி மேம்பாட்டு திட்டங்களை மட்டுமே நாம்  பதிவேற்றம் செய்ய முடியும்..


  7. மிக அத்தியாவசியமான தேவைகளை முதலில் பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


8. நிதி ஆதாரம் தேவைப்படும் திட்டங்கள் மற்றும் நிதி தேவைப்படாத திட்டங்களையும் நாம் பதிவேற்றம் செய்யலாம்.


9. பதிவேற்றம் செய்யப்பட்ட திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்ட திட்டங்களை, பள்ளி மேலாண்மை குழு தீர்மானத்தில் இயற்றி  அதை நவம்பர் 1.11.2022 அன்று நடைபெறும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதித்திட வேண்டும்.


மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை சிறப்பாக நடத்தி முடித்திட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி