பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. G.O-181 Attached - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2022

பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. G.O-181 Attached

 

ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்துவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 181 நாள்: 15.11.2011 பத்தி 2 - ல் RTE சட்டத்தின்படி National Council for Teacher Education (NCTE) Academic authority ஆக இந்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. 


இந்த Academic authority அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாவது - that the teachers to be recruited in future for the elementary segment should have passed the Teacher Eligibility Test என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனால் to be recruited in future என்ற வார்த்தைகளின்படி பார்த்தால் இந்த அரசாணைக்குப் பின்னர் எதிர்காலத்தில் புதிய நியமனங்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதே ஆகும். 


பதவி உயர்வுகளுக்கு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசாணையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.


எனவே நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கும் TET தேவை எனக் கருதி வழிகாட்டினால், துறைரீதியாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளவைகளை மேற்கோள்காட்டி மேல்முறையீடு செய்வதே சரியானதாக இருக்கும். 


கல்வித்துறை இதனை முன்னெடுக்கும் என நம்புவோம். இத்தகைய முன்னெடுப்பு ஆசிரியர்களுக்கு செய்யப்படும் சலுகை அல்ல, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை நிலைநிறுத்துவதாகும்.


G.O..No. 181 Dt. 15.11.2011  பள்ளிகல்வி - இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009 இன் படி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துதல் சார்ந்த அரசாணை - Click here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி