லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது: ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டும் நெறிமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2022

லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது: ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டும் நெறிமுறை

 

லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. ஆன்டிபயாட்டிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5  நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தரலாம்.


லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து தருவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தர பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை விவேகத்துடன் அளிக்க வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி