அரசு மருத்துவக் கல்லூரிகளில் உளவியல்துறை உதவி பேராசிரியர் பதவியில் காலியாகவுள்ள 24 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. உளவியல் அல்லது மருத்துவ உளவியலில் முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், சமூக உளவியலில் முதுகலை டிப்ளமா பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கணினிவழி தேர்வு வரும் மார்ச் 14-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 37. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. உரிய கல்வித்தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி