கல்லூரி கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2022

கல்லூரி கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம்  வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 மாத தொகுப்பூதியம்  ரூ.4,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.6,000 உயர்த்தி ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற்சி பெற மாணவர்கள் செலுத்தும் தொகை ரூ.700ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

கணினி அறிவு பயிற்சி திட்டத்தின் கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி