நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2022

நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு

 


சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 17) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9-ல் விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலைநாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக டிசம்பர் 2-ல் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை (டிசம்பர் 17) அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான மெட்ரிக் பள்ளிகளும் செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி