குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.22 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.22 அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும் . குறுவளமைய பயிற்சியின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் இருவேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படவேண்டும்.
ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுநருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .130 / இதற்காக செலவு செய்ய வேண்டும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கிகணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் . பயிற்சிக்கான தண்ணீர் , TLM போன்ற இதர செலவினங்களையும் பயிற்சி தலைப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும் .
எனவே பயிற்சிக்காக ஒரு தன்னார்வலர் விதம் ரூ .200 வரை செலவு மேற்கொள்ள வேண்டும் என இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி