இன்று வரை சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யவில்லை என தேர்வர்கள் கவலை!!!
சிறப்பாசிரியர் 2017
(ஓவியம், தையல், இசை, உடற்கல்வி) எழுதிய சிறப்பாசிரியர்களுக்கு இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை.?????
2017ல் சிறப்பாசிரியர் தேர்வு நடைபெற்றது, அவ்வாறு நடைபெற்ற தேர்வுகளில் சில மாதங்கள் கழித்து சான்றிதழ் சரிபார்ப்பு பார்ப்பு நடைப்பெற்று தேர்வு பட்டியல் வெளியிட்ட நிலையில் தமிழ் இட ஒதுக்கீடு மட்டும் வழக்குகள் இருந்தன, சில மாதங்களுக்கு பிறகு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மற்ற இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு மட்டும் 2019 நவம்பர் மாதத்தில் பணி நியமனம் செய்தனர்,,, தற்போது எந்த வழக்குகளும் இல்லாத நிலையில் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டுகிறார்கள்,,, 2019 லிருந்து அவர்கள் வாழ்வாதாரம் இழந்து மன உளைச்சலில் இருக்கின்றனர்,,, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தங்கள் பிறந்த நாளில் சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு நல்ல செய்தி தரும் படி தேர்வர்கள் கேட்டு கொள்கிறார்கள்.
Good news
ReplyDelete