சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2023

சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பதவி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்


காலியிடங்கள்: 335


சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400


தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை.


விண்ணப்பிக்கும் முறை: https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவினர் ரூ.300, மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். ...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி