போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியை மீது வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2023

போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியை மீது வழக்கு

 

திருச்சி மாவட்டம், துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சிங்கராயர். இவருடைய மனைவி சகாயசுந்தரி (வயது 49). இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். தற்போது மண்ணச்சநல்லூர் மூவாரம்பாளையம் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.


இந்தநிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சகாயசுந்தரியும் தனது கல்விச் சான்றிதழ்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்துக்கு அனுப்பினார்.

வழக்கு

அங்கு சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என்றும், போலி சான்றிதழ்களை கொடுத்து 25 ஆண்டாக அவர் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுகாயசுந்தரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி பரிந்துரை செய்தார்.


மேலும் இது குறித்து அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில், சுகாயசுந்தரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகள் ஆசிரியையாக சகாயசுந்தரி பணியாற்றி வந்த சம்பவம் கல்வி அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி