ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்த சம்பவத்தில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பின் பள்ளி தலைமையாசிரியர் ஜனகராஜ் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டார்.
இப்பள்ளியில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 186 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 12 பேர் பணிபுரிகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையதளங்களில் சில நாட்களுக்கு முன் வைரலானது.
சம்பவம் குறித்து தேனி சி.இ.ஓ., செந்திவேல்முருகன் விசாரணைக்கு பின் பெரியகுளம் ஆர்.டி.ஓ., சிந்து பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார். இதன் அறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி கலெக்டர் முரளீதரன் பரிந்துரையில் சி.இ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜ்யை திண்டுக்கல் மாவட்டம், எழுவனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி