பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்.10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு வரும் மாா்ச் 13 முதல் ஏப்.3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளை தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இந்த நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான காலஅட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அதில், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10-ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: ஒவ்வொரு பாடத்தோ்வு முடிந்த பிறகும், மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப். 7-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
தொடா்ந்து, ஏப். 10 முதல் 21-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியில் சுமாா் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா்.
மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றனா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி