பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2023

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட முடியாது; பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே, வழிகாட்டுனராக பணியாற்ற முடியும்.


இந்த விதிமுறையால், பிஎச்.டி. வழிகாட்டுனரின் எண்ணிக்கை குறைந்து, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உயர் கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் பயிற்சி காலத்திலும், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி