நீண்ட நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழப்பு - தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2023

நீண்ட நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழப்பு - தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் என நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

235 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னை, கோவையில் 10 பேரும், செங்கபட்டில் 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 3 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தருமபுரி, கடலூர், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி