புதிய ஓய்வூதிய திட்டம் : மேம்படுத்த குழு அமைக்க அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2023

புதிய ஓய்வூதிய திட்டம் : மேம்படுத்த குழு அமைக்க அரசு முடிவு

 


புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த, நிதிச் செயலரின் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ல் மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பின் மத்திய அரசில் சேர்ந்த ஊழியர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.


புதிய மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடாக இருப்பது, பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையின் அளவாகும். பழைய திட்டத்தின்படி, ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது பெறும் ஊதியத்தில் பாதி ஓய்வூதியமாகக் கிடைக்கும்.


இதற்காக ஊழியர்களின் பணிக் காலத்தில் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் எதுவும் செய்யப்படாது. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படும். இதனால் அவர்களுக்கு கூடுதலான ஓய்வூதியம் கிடைக்கும்.


மேலும், பழைய திட்டம் மூலம் நிலையான ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், புதிய முறையில் அப்படி இல்லை.


இதனால், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


குறிப்பாக, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பழைய முறையையே தொடர விரும்புவதற்கான முடிவை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.


இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த புதிய அணுகுமுறை உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில், நேற்று 2023ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை தாக்கல் செய்த அவர் கூறியதாவது:


அரசு ஊழியர்களின் கோரிக்கையை தீர்க்கவும், நிதி கட்டுப்பாட்டை காக்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய, நிதித் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.


மத்திய - மாநில அரசு ஊழியர்களின் நலன் கருதி, புதிய ஓய்வூதிய அணுகுமுறை உருவாக்கப்படும். இந்த அணுகுமுறை அவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி