School Morning Prayer Activities - 08.03.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2023

School Morning Prayer Activities - 08.03.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 08.03.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

பொருள்:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர் பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

பழமொழி :
Better to give than to take.

கொள்வதைவிடக் கொடுப்பது மேல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.


பொன்மொழி :

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை


பொது அறிவு :

1. மஞ்சள் காமாலை எந்த உறுப்பை பாதிக்கிறது ?

 கல்லீரல் . 

 2. புற ஊதாக்கதிர்கள் தரும் வைட்டமின் எது?

 " டி " வைட்டமின்.


English words & meanings :

Elite - a select group of people they are superior, "These are the elite group in Indian army" noun. ஒரு சிறந்த நடத்தை திறமை கொண்ட குழு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

காய்ச்சலின் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின் படி வாய்வழி திரவங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் இழப்பை ஈடுசெய்ய உதவும்.


மார்ச் 08 இன்று

அனைத்துலக பெண்கள் நாள்



அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.


நீதிக்கதை

தென்னை மரம்!

அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார். அவர் அரசரிடம், அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்றுவிட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்... என்று முறையிட்டார்.

அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார். அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார். அப்போது அரசர் என்ன செய்யலாம்? என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் புரிந்து கொண்டு, தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்... என்றார்.

அரசர், சரி என்றார். தெனாலி அந்த நபரிடம், நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா... என்று அவனை அனுப்பி விட்டார். மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார். அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா? என்றார். அதற்கு அவன், ஆம் ஐயா! என்றான். சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு... என்றார் தெனாலிராமன்.

அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான். சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்? என்று திகைத்தார். பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், சரி... இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை... என்றார். அந்த மனிதருக்கு ஏமாற்றம். அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, இன்னொரு விஷயம்... அந்த மரம் நீ வாங்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்... என்று கூறி விளக்கினார். 

அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு... என்றார் வாங்கியவரிடம். திரும்பப் பெற்றவரிடம், காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்...? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்... அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப்போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக்கூடாது. நீயும் பறித்துக் கொள்ளக்கூடாது... என்றார்.

தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார். திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம். புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.


இன்றைய செய்திகள் - 08.03. 2023

* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

* பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவிதொகைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு.

* சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,   தெலங்கானாவில் பெண் அரசு ஊழியர்களுக்கு நாளை அரசு விடுமுறை.

* பெரும் பின்னடைவில் சீன பொருளாதாரம் - 50 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என தகவல்.

* 350 கிலோ மீட்டர் மாரத்தான் பந்தயத்தை 102 மணி நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுகந்த் சிங் சுகி நிறைவு செய்துள்ளார்.

* சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  10 நகரங்களில் 12-ம் தேதி நீச்சல் போட்டி நடத்தப்பட உள்ளது.

* ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Today's Headlines

* The Tamil Nadu government is planning to set up an aerospace industrial park near Kulasekaranpatnam in Thoothukudi district.

* Part-time special teachers staged an attention demonstration at TBI campus, Chennai, demanding permanent job tenure.

 * Tamil Nadu government invites applications for monthly allowance for senior Tamil scholars.

* On the occasion of International Women's Day, tomorrow is a public holiday for women government employees in Telangana.

* China's economy in deep recession - reported worst in 50 years

* India's Sukanth Singh Suki completed the 350 km marathon in 102 hours.

 * A swimming competition will be held on 12th in 10 cities on the occasion of International Women's Day.

* Ukraine's Marta Kostyuk has won the ATX Open tennis title.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி