School Morning Prayer Activities - 07.03.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2023

School Morning Prayer Activities - 07.03.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 07.03.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.


பொருள்:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்


பழமொழி :

Welcome is the best dish.


முகமலர்ந்து உபசரிப்பதே நல்விருந்து.


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 


2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.


பொன்மொழி :


நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.


பொது அறிவு :


1. தமிழ்நாட்டில் மின்சார வாரியம் எப்போது தொடங்கப்பட்டது ? 


1957ஆம் ஆண்டு . 


2.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை?


 33.


English words & meanings :


Elegant -graceful and stylish in appearance or manner. adjective. She is elegant. நேர்த்தியான. பெயரடை

ஆரோக்ய வாழ்வு :


காய்ச்சல் வந்ததும் பலர் நமக்கு கூறும் அறிவுரைகளில் ஒன்று ஆவி பிடிப்பது. இது உடலுக்கும் நாம் இருக்கும் அறையை ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவும். எனவே காய்ச்சல் வந்தால் சிறிது நிமிடம் ஆவி பிடியுங்கள் மற்றும் சுடு நீரில் குளியுங்கள்.


நீதிக்கதை


உலகிலேயே வெண்மையான பொருள் எது?


ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர். அப்போது அமைச்சர், அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள் என்றார். அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன் என்றார். 


அமைச்சர், வெள்ளி நகை தான்... என்றார். அரசகுரு, பால் தான்! என்றார். சிலர், சம்பா மலர்! என்றனர். வேறு சிலர், மல்லிகை தான் என்றனர். இன்னும் சிலர் சுண்ணாம்பு தான்! என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார். நாளைக்குக் கூறுகிறேன் என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது. பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.


வெளியில் வந்து, அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்... என்றார். அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத் திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.


உடனே தெனாலிராமன், அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.


சபையினரிடம் அரசர், தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...? என்றார். தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள் என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.


இன்றைய செய்திகள் - 07.03. 2023


* கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே H3N2  இன்புளுயன்சா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* ''மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம்'' - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.


* முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி வெளியாகின்றன.


* உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


* உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் 3 முறை நிலநலடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.


* இந்தோனேஷியா எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உயிரிழப்பு; 3 பேர் மாயம்.


* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டெல்லி கேபிடல்ஸ் வெற்றி.


* இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.


Today's Headlines


* Minister M. Subramanian has said that by following the rules of corona prevention, we can protect ourselves from the effects of the H3N2 influenza virus.


 * "Immediate action is necessary on the petitions given by the people" - CM Stalin's insistence to the District Collectors.


 * 2 lakh doctors appeared in the NEET exam held across the country for postgraduate medical courses.  The exam results will be released on the 31st.


 * Indian researchers have discovered a better medical treatment for life-threatening scrub typhus fever.


 * 3 earthquakes occurred in the Uttarakhand district of Uttarakhand state.  As a result, people ran out of the house in a panic.


 * Indonesia fuel depot fire: 19 dead;  3 people are missing.


 * Women's Premier League Cricket: Delhi Capitals won.


 * The rest of India won the Irani Cup Cricket Championship.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி