1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் அறிவுரைகள் ( 06.04.2023) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2023

1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் அறிவுரைகள் ( 06.04.2023)

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.


 பார்வை -1 ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும் , பார்வை -2 ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் . 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , மாவட்டங்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது . இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் , ஆசிரியர் , பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை , கற்றல்நிலை , உடல்நலம் , மனநலம் , கல்வி இணைச் செயல்பாடுகள் , கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன் , கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் .

மேலும் , பள்ளிக் கடைசி வேலை நாளாக 28.04.2023 எனவும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி