பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2023

பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு

 

பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 2-வது வாரத்தில் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள்உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு 2018-ம் ஆண்டு முதல் இணையவழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் நடத்திவருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள மே 8-ம் தேதி முதல் தொடங்கும் என தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கான முன்தயாரிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசு அனுமதி அளித்ததும் இணையதள விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்’’என்றனர். ​


இதேபோல், உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 163 அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள்உள்ளன. இவற்றில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவும்மே 9-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் தனியார்கலை, அறிவியல் கல்லூரிகள் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி