அரசு பள்ளிகளில் படிக்கும், 260 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட், கியூட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களில் பலர், ஜே.இ.இ., பிரதான தேர்வில் பங்கேற்றனர்; 260 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நேரடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
எனவே, அந்த மாணவர்களுக்கு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், உணவு, இருப்பிட வசதி அளித்து, ஜூன் முதல் வாரம் வரை, இலவச பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி