புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2023

புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் நியமனம்

 


தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலை, அறிவியல் கல்லூரிகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த எம்.ஈஸ்வர மூர்த்தி, முழு கூடுதல் பொறுப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் பணிக்காலம் முடிந்து நேற்று முன்தினம் ஒய்வுபெற்றார்.


இதையடுத்து புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜி.கீதாவை (முழு கூடுதல் பொறுப்பு) நியமனம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்குநராக அவர் நேற்று பொறுப்பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி