DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2023

DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு

மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கணினிவழி தேர்வாக ஏப்ரல் 20-ம்தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.


இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வுப்பணி மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்குநியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள்டிஇஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆவணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் காண்பித்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி