TNPSC : குரூப் - 4 சான்றிதழ் பதிவு மெமோ வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2023

TNPSC : குரூப் - 4 சான்றிதழ் பதிவு மெமோ வெளியீடு.

 

கடந்த ஆண்டு ஜூலையில், அரசு துறையில் 10 ஆயிரத்து, 117 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, நடந்தது.


டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இந்த தேர்வில், 18 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு மார்ச், 24ல் வெளியானது.


தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான 'மெமோ' என்ற நினைவூட்டல் கடிதத்தை, இணையதளத்தில் தேர்வர்களின் பெயரில், டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.


பட்டியலில் பதிவெண் கொண்டவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை 'ஸ்கேன்' செய்து, 'இ - சேவை' மையம் வழியே, வரும், 13ம் தேதி முதல் மே, 5க்குள் பதிவேற்ற வேண்டும்.

1 comment:

  1. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி