10ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வு 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2023

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வு 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு ஜூன் 27ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, வரும் 23ல் துவங்குகிறது.


இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூன் 27ல் துணை தேர்வு துவங்க உள்ளது. பிளஸ் 1க்கான துணை தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்புக்கு, ஜூன் 27; மொழி பாடம்; ஆங்கிலம் - ஜூன் 28; கணிதம் - ஜூன் 30; விருப்ப மொழி பாடம் - ஜூலை 1; அறிவியல் - ஜூலை 3 மற்றும் சமூக அறிவியல் - ஜூலை 4ல் நடக்கிறது.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும், 23ம் தேதி நண்பகல் 12:00 மணி முதல், வரும், 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில், இந்த மாதம், 30 மற்றும் 31ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணம், 500 ரூபாயும்; பிளஸ் 1க்கு சிறப்பு அனுமதி கட்டணம், 1,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி