10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: தேர்வு முடிவுகள் மே 17-ல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2023

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: தேர்வு முடிவுகள் மே 17-ல் வெளியீடு

 

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.


ஏப்.24-ல் தொடங்கிய இந்தப்பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இப்பணியில் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்றுடன் (மே 4) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி