இந்த நிலையில், தமிழக அமைச்சரவை 3வது முறையாக சிறிய அளவில் மாற்றியமைக்கப்பட்டது.
*பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டதை அடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, புதிய அமைச்சராக பதவியேற்றார். புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அவருக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
*தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது.நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் , புள்ளியியல் ஆகிய துறைகளையும் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் தங்கம் தென்னரசு கவனிப்பார்.
*நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
*தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
*தங்கம் தன்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித் துறை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
இவ்வாறு 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி