தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 தேர்வில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.37% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூரில் 96.38% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாா்ச் 14 முதல் ஏப்.5 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வை 7.73 லட்சம் போ் எழுதினா்.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
இயற்பியல் 95.37%
வேதியியல் 96.74%
உயிரியல் 96.62%
கணிதம் 96.01%
தாரவவியல் 95.30%
விலங்கியல் 95.27%
கணினி அறிவியல் 99.25%
வணிகவியல் 94.33%
கணக்குப்பதிவியல் 94%
மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
திருப்பூரில் 96.38% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுமுதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக..
ஈரோடு 96.18%
கோவை 95.73%
நாமக்கல் 95.60%
தூத்துக்குடி 95.43%
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
மாநகராட்சி பள்ளி 82.86%
நகராட்சி பள்ளி 88.10%
ஆதிதிராவிடர் பள்ளி 76.10%
பழங்குடியினர் பள்ளி 90.69%
சமூகநலத் துறை பள்ளி 87.64%
கள்ளர் பள்ளி 90.43%
மாணவா்கள் இணையதள முகவரிகளில் தங்களது தோ்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறியலாம்.
மாணவா்களுக்கு பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித் தோ்வா்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பித்த போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி