பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில், 12 ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.
ஓவியம், தையல், இசை, கணினி, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் நடத்தும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறை என்பதால், அந்த மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், தங்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பணி வழங்குமாறும், பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குமாறும் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர்.
இது உலகமே இல்லை ஏன் உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறீர்கள் இருக்கிற வேலையை போய் பாருங்கள்."இறந்தால்" அங்க மட்டும் நிம்மதி கிடைத்து விடுமா._🙄🙄🙄🙄🙄🙄🤦🤦🤦🤦🤔🤔🤔🤔🤔😡😡😡😡😠😠😠😠
ReplyDeleteதி.மு.க வும் அதிமுக வைப் போல முழுத் திருடன். பைபிளில் ஒரு வாசகம் உண்டு. திருடன் திருடவும் கொலை செய்யவும் வருகிறானேயன்றி வேறொன்றிர்க்கும் வரான்.
ReplyDelete