தமிழக அரசு வழங்கும் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியானவர்கள், வரும் 30ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து, தமிழக உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, ஆண்டுதோறும் அரசின் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்படும்.
சுதந்திர தின விழாவின் போது, விருதுடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தகுதியானவர்கள், தங்கள் விபரங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன், வரும் 30ம் தேதிக்குள் 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி