மாநில அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள் / ஆங்கிலோ பழங்குடியினர் இந்தியப் பள்ளிகள் / சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 - ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது . விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ .10,000 ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) ரொக்கப் பரிசும் , ரூ .2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும் , பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது . பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து அரசாணை வெளிடப்பட்டுள்ளது.
அரசாணையில் தற்போது பின்வரும் எண்ணிக்கை அடிப்படையில் 38 வருவாய் மாவட்டத்திற்கு கீழ்கண்டவாறு விருதுகள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி