CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் நாளை காத்திருப்புப் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2023

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் நாளை காத்திருப்புப் போராட்டம்.

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திண்டுக்கல்லில் நாளை நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற மகத்தான போராளி மேனாள் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன் அவர்கள் வருகை தர உள்ளார்.

எனவே, நமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் நாம் அனைவரும் பங்கு பெறுவோம்.



CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

24 மணி நேர காத்திருக்கும் போராட்டம் நடத்த ஆலோசணைகள்


1) மாவட்ட அளவில் கூட்டத்தை நடத்தி திட்டமிட வேண்டும்


2) துண்டு பிரசுரம் சுவரொட்டி பேனர் அச்சடிக்க வேண்டும்


3) அரசு ஊழியர் ஆசிரியர்கள்களிடம் பிரசசாரம் செய்ய வேண்டும்


4) செலவுகளை ஈடுகட்ட நிதி வசூல் செய்ய வேண்டும்


5) காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்க வேண்டும்


6) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வாய்ப்புள்ள அரசு அலுவலகத்தில் காத்திருப்பு நடத்த வேண்டும்


7) பந்தல் நாற்காலி ஒலிபெருக்கி இரவில் ஒளிவிளக்கு,இரவு தங்க தார்பாய் அல்லது சமுக்காளம் ஏற்பாடு செய்ய வேண்டும்


8) 25 ம் தேதி மதியம் மற்றும் இரவு 26 ம் தேதி காலை உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்


9) போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் இரவு தங்க போர்வை மாற்று உடை பற்பசை பிரஸ் மாத்திரை சாப்பிட வேண்டியவர்கள் மாத்திரைகள் மற்றும் தேவையான பொருட்களுடன் வருவதை உறுதிசெய்ய வேண்டும்


10 இரவில் அதிகமான ஊழியர்கள் தங்க வேண்டும். குறிப்பாக பெண் ஊழியர்கள் இரவில் அவசியம் தங்க வேண்டும். இரவில் பெண் ஊழியர்கள் தங்கினால் தான் அரசு மற்றும் ஊடகங்கள் கவனம் ஈர்க்கப்படும்


11) போராட்டத்தில் பங்கேற்கும் எண்ணிக்கையை உயர்ந்த முயற்சி செய்ய வேண்டும். எண்ணிக்கை குறைவாக இருப்பதால் போராட்டத்தை நடத்தாமல் இருக்க கூடாது. எத்தனை நபர்கள் பங்கேற்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை.எத்தனை மாவட்டங்களில் நடைபெறுகிறது என்பதுதான் கவனத்தில் கொள்ளப்படும். எனவே, அதிகமான இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்


  மாநில மையம்


1 comment:

  1. இவர்களை முதலில் ஒழிப்பு செய்தால் CPS தானா ஒழிந்திடும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி