சித்தா மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், அதற்கு பதிவு எண் கிடைக்காததால், பயிற்சி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பி.எஸ்.எம்.எஸ்., என்ற சித்தா மருத்துவத்தை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில், 2018 - 19ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் ஐந்தாண்டு முடித்துள்ளனர்.பயிற்சி மருத்துவராக பணியாற்றுவதற்கு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான பதிவு கிடைக்க காலதாமதம் ஆவதால், முதுநிலை மருத்துவம் மற்றும் அரசு பணிக்கான எம்.ஆர்.பி., தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். அந்த வகையில், பதிவு எண் அளித்தால் மட்டுமே, நாங்கள் பயிற்சி டாக்டராகவும், முதுநிலை மருத்துவம் மற்றும் இதர தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.ஆனால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. பலமுறை கேட்டாலும் உரிய பதில் தர மறுக்கின்றனர். இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி