ஆராய்ச்சி உதவி தொகைக்கான தகுதி தேர்வு: அக். 20 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2023

ஆராய்ச்சி உதவி தொகைக்கான தகுதி தேர்வு: அக். 20 முதல் விண்ணப்பிக்கலாம்

 

முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதி தேர்வுக்கு அக்.20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்களிடையே ஆராய்ச்சி திறனைவளர்க்கவும், புதிய ஆராய்ச்சி களை மேற்கொள்ளவதை ஊக்குவிக்கவும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்துக்கான தகுதி தேர்வு 2023-2024-ம்ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.


தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்புக்காக நிதியுதவி அளிக்கும் வகையில், தமிழகத்தை சார்ந்த தகுதியான மாணவர்களிடம் இருந்து 2023-24-ம் ஆண்டுக்கான முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.


இது தொடர்பாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய இணையதளத்தில் (https://trb.tn.gov.in/) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே,விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக அக்.20-ம் தேதி முதல் நவ.15-ம் தேதி பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி