கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற் கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2024

கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற் கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு

 

குடியரசுத் தின விழா  நாளை இந்தியா முழுவது நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் சிறப்பாக குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெறும். குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.


இந்த குடியரசுத் தின விழாவை முன்னிட்டு நாளை குடியரசுத் தின மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.  இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் 34பேருக்கான பத்ம விருதுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு கும்மி பயிற்சி அளித்ததற்காகவும் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி