வரும் 26ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அரசு பள்ளிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குடியரசு தினத்தையொட்டி, 26ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை, உறுப்பினர்கள், தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கூட்டங்களில், பள்ளிக்கல்வி சார்பில், அதிகாரிகள் அல்லது உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணிகள் போன்றவை குறித்து, ஆசிரியர்கள் பேச வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுவரை பள்ளிக்கு தேவையான ஒரு சிறு உதவி கூட ஊராட்சியின் மூலம் கிடைக்கவில்லை. பிறகு என் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். தங்கள் சொந்த செலவிலேயே தலைமை ஆசிரியர்கள் அனைத்து 0அணிகளையும் செய்துகொள்கிறார்கள். இது அரசுக்கு தெரியாதா ?
ReplyDeleteSorry ஏன் , பணிகளையும்
ReplyDeleteதலைமை ஆசிரியர்களுக்கு வேறு வேலை இல்லையா? கற்பித்தல் பணியை தவிர்த்து பிற பணிகளை ஏன் வழங்குகிறீர்கள் ஆசிரியர்களுக்கு?
ReplyDeleteIncentive, Gpf etc எல்லாம் கேட்டா நாங்க இப்படி தான் திசை திருப்புவோம் 😆😆😆
Deleteமாணவர்களின் ஒழுங்கீனமான செயல்களை கண்டிக்கவும். எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் சை ஒழித்தால் போதும் பள்ளிகள் சீரமைப்பு செய்துவிடலாம்...
ReplyDelete