கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2024

கல்விக் கடன் பெற இன்று சிறப்பு முகாம்

 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கல்விக்கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் வங்கிகள் இணைந்து எடுத்துவருகின்றன.


இதன் ஒருபகுதியாக, சென்னையில் மாபெரும் கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் இன்று (பிப்.15) நடைபெற உள்ளது.


கல்விக்கடன் விண்ணப்பம் மற்றும் அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான் கார்டு விண்ணப்பம் இ-சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம்.


இந்த முகாமில், அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி