+2 இயற்பியல் பொதுத்தேர்வு - கஷ்டங்கள் கவிதையாய்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2024

+2 இயற்பியல் பொதுத்தேர்வு - கஷ்டங்கள் கவிதையாய்...


+2 பொதுத்தேர்வு

இயற்பியலை

பூ என்று 

நம்பியிருந்த

மாணவர்களுக்கு

மீண்டும்

முள் என்று தன் 

அசல் முகத்தைக்

காட்டியது..          


ஐந்து 

மதிப்பெண்ணில்

வந்த 

மீட்டர் சமனச்சுற்று

பார்த்ததும்

பல பேருக்கு

தலைச்சுற்றுதான்

ஏற்பட்டது..


'நீண்டநேர்கடத்தி'

பயட்சாவர்ட் 

படித்தவனுக்கு

'வட்டவடிவ '

கம்பிச்சுருள்

வந்ததும் 

தெரியாமல்

அங்கேயே

வட்டமடிக்க

ஆரம்பித்தான்


அச்சுக்கோடு

அச்சம்

தவிர்த்தது..

ஐன்ஸ்டீன்

ஒளிமின் விளைவு

வந்ததில் தான் 

நோபல்பரிசு 

வாங்கிய

சந்தோஷம்

அவனுக்கு..


உட்கவர்

வெளியீடு நிறமாலை

வராமல்

ஏதோ வந்து

அவனை

ஏதேதோ 

செய்தது..


திசை தெரியாதிருந்தவனை முப்பட்டக

திசைமாற்றுக்

கோணம்

வந்து வழிகாட்டியது..



மூன்று

மதிப்பெண்

ஓராண்டு

வஞ்சத்தை

ஒரேயடியாய்

தீர்த்தது..


இதுவரை

கேட்காத

கேள்விகளை

கேட்டவர்

வீட்டில்

சண்டை 

போட்டு வந்து

வினா எடுத்தார்

போல..

அப்படி வாங்கியிருந்தார்

பழியை..


முக்கிய

வினாக்களை

மூட்டைகட்டிவிட்டு

'தேமே'என்றிருந்த

வினாக்களை

தேடிப்பிடித்து

கேட்டிருக்கிறார்..


இரண்டு

மதிப்பெண்ணில்

அவரின் கோபம் 

தணிந்து

சமாதானக்கொடி

அங்கங்கு

பறந்தது..


ஒரு மதிப்பெண்

மட்டும்

மாணவனுக்கு

முதுகு

காட்டாமல்

முழுவதுமாய்

முகம் காட்டியிருந்தது..


பழிவாங்குதல்

பலவிதம்..

இந்த வினா

எடுத்ததும்

அதில் ஒருவிதம்..


ந.வீரா

திமிரி

2 comments:

  1. ஆமாப்பா...ஆமாம். உன் கவிதை எங்களின் வருத்தம் போக்கியது. அருமை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி