தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 6 நாட்களில் 82,000 மாணவர்கள் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2024

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 6 நாட்களில் 82,000 மாணவர்கள் சேர்க்கை

 

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி சேர்க்கை தொடங்கிய 6 நாட்களில் 82 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வரும் கல்வியாண்டில் ( 2024 - 25 ) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாகவே சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டன. அத்துடன், அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடங்கிய 6 நாட்களில் ( சனி, ஞாயிறு விடுமுறை தவிர்த்து ) 82,050 மாணவர்கள் பள்ளியில் சேர பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,411 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக சேலத்தில் 7,890 பேரும், கிருஷ்ணகிரியில் 7,770 பேரும் சேர்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சம் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகள் நடப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி