மொழிவழி சிறுபான்மை மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத ஓராண்டுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2024

மொழிவழி சிறுபான்மை மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத ஓராண்டுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு

 

தமிழ்மொழி அல்லாத மொழிவழி சிறுபான்மையின மாணவர்கள் கட்டாய தமிழ்மொழி பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை: கடந்த 2006-07-ம் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், இச்சட்டப்படி, 2006-ம் ஆண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பகுதி -1 ல் தமிழ் மொழிப்பாடத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.


இந்த சூழலில், மொழி வழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று, வரும் ஏப்ரல் மாதம் தேர்வு எழுத உள்ள தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் விலக்குகோரி விண்ணப்பித்தால், அவரர்களின் சிறுபான்மை தாய்மொழிப் பாடத்தில் தேர்வெழுத அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி