10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 10-ல் முடிவு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2024

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 10-ல் முடிவு வெளியீடு

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், விருப்ப பாடம் என ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிவிட்டு நடந்து வந்தது.


இந்நிலையில், கடைசி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. அனைத்து தேர்வுகளும் நேற்றுடன் முடிவடைந்தன.


விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 88 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி